மைக்கை தூக்கிக் கொண்டு எகிறிய திமுக கவுன்சிலர்!சாலை ஓரத்தில் உள்ள முட்பூதர்களை அகற்ற ஜேசிபி இயந்திரம் மூலம் ஒரு லட்சத்து 87 ஆயிரம் செலவு செய்து துப்புரவு பணியை மேற்கொண்டனர். இந்த செலவினம் தொடர்பான அனுமதியை மாமன்ற கூட்டத்தில் வைத்த போது அதிமுகவை சேர்ந்த வெள்ளாளப்பட்டி உறுப்பினர் சுரேஷ் வெள்ளாளப்பட்டியில் எந்த பணியும் செய்யாமல் கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார் தெரிவித்தார்.அதற்கான புகைப்படத்தை மாமன்றத்தில் ஆதாரமாக காட்ட வேண்டும் என அதிமுக கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பினர். இதையடுத்து ஆவோசமடைந்த திமுக உறுப்பினர். சக்திவேல் உன் சவுரியத்துக்கு போட்டோ காட்ட முடியாது. இஷ்டம் இருந்தால் கூட்டத்தில் இருக்கலாம் இல்லை என்றால் வெளியே செல்லுங்கள் என அதிமுக மாமன்ற உறுப்பினரிம் கூச்சலிட்டார். பின்னர் ஆவேசமடைந்த அவர் மைக்கை தூக்கிக் கொண்டு தாக்கச் சென்றதால் பரபரப்பு ஏற்றது. மேலும் தகாத வார்தையால் கவுன்சிலர் சக்திவேல் பேசியதும் பரபரப்பை ஏற்படுத்தியது.