ராகுல் காந்தி எம்பி பதவி நீக்கத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்!
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கிருஷ்ணராயபுரம் பேருந்து நிறுத்தம் அருகே கிருஷ்ணராயபுரம் வட்டார காங்கிரஸ் கட்சியினர் சார்பில் அகில இந்திய முன்னாள் தலைவர் எம் பி பதவி நீக்கத்தினை கண்டித்து மத்திய பாஜக அரசு எதிராக வட்டார காங்கிரஸ் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அகில இந்திய காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் பேங்க் சுப்ரமணியன் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.ராகுல் காந்தி மீது பொய் வழக்கு தொடர்ந்து அதற்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையை வழங்க மத்திய பாஜக அரசு முனைப்பு காட்டியது ராகுல் காந்தி மக்களவையில் அதானிக்கு கொடுத்த கடன் பற்றியும் அவரது அசுர வளர்ச்சி குறித்து கேள்வி கேட்டதற்கு பதில் தர இயலாத மத்திய பாஜக அரசின் பழிவாங்கல் செயல் என்றும், தொடர்ந்து காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பொதுவுடமை ஆக்கிய அரசு நிறுவனங்களை தற்போது கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மத்திய பாஜக அரசு விற்று வருவதாகவும், கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக மட்டுமே பாஜக அரசு செயல்படுவதாகவும் அதனை கேள்வி கேட்டதால் தான் ராகுல் காந்தி மீதி திட்டமிட்டு பொய் வழக்கு போட்டு எம்பி பதவி நீக்கம் செய்ததாகவும் கண்டன உரையாற்றினர்.மேலும் மத்திய பாஜக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களையும் முழக்கமிட்டனர்.karurTimesXP TamilUpdated: 21 Apr 2023, 2:40 pm