கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் சித்திரை மாத தேய்பிறை அஷ்டமி பூஜை
1052 views
Subscribe கரூர் videosதென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் சித்திரை மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு என்னைக்காப்பு சாற்றி,பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், பன்னீர், விபூதி உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.அதை தொடர்ந்து கால பைரவருக்கு ஆலயத்தின் சிவாச்சாரியார் பட்டாடை உடுத்தி வண்ண மாலைகள் அணிவித்து வடைமாலை சாட்சிய பிறகு சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டிய பிறகு மகா தீபாராதனை நடைபெற்றது.கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற சித்திரை மாத தேய்பிறை அஷ்டமி கால பைரவர் சிறப்பு அபிஷேகத்தை காண ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.