கரூரில் இரண்டாவது நாளாக போராட்டம் நடத்தும் அங்கன்வாடி ஊழியர்கள்!
1066 views
Subscribe கரூர் videosகல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடுவதைப் போல அங்கன்வாடி மையங்களுக்கும் கோடை விடுமுறை விட வேண்டும் என அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் நிர்ணயிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி,அதே நேரத்தில் திமுக தேர்தல் நேரத்தில் தெரிவித்த வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றவில்லை எனக் கூறிய அங்கன்வாடி ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசுக்கு எதிராக நேற்று மாலை முதல் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக முன்புறம் காத்திருப்பு போராட்டம் ஈடுபட்டனர்.இரவிலும் தொடர்ந்து நடைபெற்ற போராட்டம் பின்னர் தற்போது இரண்டாவது நாளாக அதே கோரிக்கையை வலியுறுத்தி இன்றும் காத்திருப்பு போரட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த காத்திருக்க போராட்டத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் என 300 -க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர்.