கரூர் அருகே கரு மேகங்கள் சூழ்ந்து மழை வருவதற்கு முன்பு மயில் தோகை விரித்து நடனமாடிய வீடியோ வைரல்!
Subscribe கரூர் videos
Like
Comment
Share
கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் அடுத்த எல்லமேடு பகுதியில் விவசாய தோட்டம் ஒன்றில் அமைந்துள்ள மோட்டார் அறையின் மேல் மயில் ஒன்று அமர்ந்திருந்தது. அப்போது மழை வருவதற்கு முன்பாக கருமேகங்கள் சூழ்ந்து வானம் ரம்யமாக காட்சியளித்தது. அந்த நேரம் மயில் அழகான தனது தோகை முழுவதையும் விரித்து, நடனமாடிய காட்சியை அப்பகுதியை சேர்ந்த ஒருவர் தனது செல்போனில் பணம் பிடித்து வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.