ஏழாவது நாள் சோதனை; அதிரடி காட்டிய ஐடி அதிகாரிகள்!அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் வீட்டில் முதல் நாள் (26 ஆம் தேதி) வருமானவரித்துறை அதிகாரி காயத்ரி தேவி உள்ளிட்டோர் சோதனை செய்ய முயன்ற போது, அவர்களை சூழ்ந்துக் கொண்ட திமுகவினர், அவர்களை தடுத்து, தாக்கி துரத்தி விட்டனர்.அதன் பிறகு, 29ம் தேதி நள்ளிரவு அசோக் குமார் வீட்டிற்கு சென்ற ஐடி அதிகாரிகள், '30ஆம் தேதி கரூரில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும்' என்று பூட்டியிருந்த வீட்டின் கதவில் சம்மன் ஒட்டிச் சென்றனர்.அப்போதும் ஆஜராகாத அசோக்குமார், தனது ஆடிட்டர் சதீஷ்குமார் என்பவர் மூலம் கால அவகாசம் கேட்டு மனுத் தாக்கல் செய்திருந்தார்.இந்நிலையில், ஏழாவது நாளாக சோதனை தொடரும் நிலையில், முதன்முதலாக சற்று முன்பு அசோக்குமார் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையை துவங்கி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.