ஹெல்மெட் அணியாமல் வந்த இரு வாகன ஓட்டிகள் போக்குவரத்து போலீசாரை கண்டதும், சிதறி ஓடினர்!!
1043 views
Subscribe கன்னியாகுமரி videosகன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் ஹெல்மெட் அணியாமல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வர அனுமதி இல்லை என உத்தரவு பிறப்பித்தார், அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தினமும் ஏராளமான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர், அந்த வகையில் இன்று வழக்கம்போல் ஹெல்மெட் சோதனை நடைபெற்று வருகிறது, போலீசார் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக சோதனை செய்தபோது தூரத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்து கொண்டிருந்த ஏராளமானோர் தப்பி ஓடிய சம்பவம் அரங்கேறியது, தனது ஆபத்தினை உணராமல் சாலை நடுவே வாகனத்தை திருப்பி செல்லும் வீடியோ காட்சிகள் இதர வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.