கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடபட்டது!
1062 views
Subscribe கன்னியாகுமரி videos. இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ரமலான் பண்டிகை ஆண்டு தோறும் ரமலான் மாதத்தில் கொண்டாடபடுவது வழக்கம் . ஈகையின் மகத்துவத்தை உலகில் ஊணர்த்தும் வகையில் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வரும் ரமலான் பண்டிகை வளைகுடா நாடுகளை தொடர்ந்து இன்று தமிழகத்தில் தவ்ஹீத் ஜமாத் அமைப்பினரால் கொண்டாடபடுகிறது. இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் மிக உயர்வான கடமையான நோன்புடன் தொடங்கும் இந்த பண்டிகை நிறைவாக ரமலான் பண்டிகையாக கொண்டாட படுகிறது. அந்தவகையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் இன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே மஸ்ஜிதுல் அஸ்ரப் பள்ளி, புதுத்தெருவில் ஏராளமான இஸ்லாமியர்கள்ரமலான் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர் . இந்த விழாவில் பெண்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு ரமலான் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டன பின்னர் ஒருவருக்கு ஒருவர் ரமலான் திருநாள் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர் .