தேங்காய் நார் தும்பு ஆலை கழிவுகள் தீ பிடித்து விபத்து:போலீசார் விசாரணை!
1117 views
Subscribe கன்னியாகுமரி videosகன்னியாகுமரி மாவட்டத்தில் தென்னை விவசாயம் அதிகமாக உள்ள பகுதிகளில் ஈத்தாமொழி, மேலகிருஷ்ணன்புதூர் ராஜாக்கமங்கலம் ஆகிய பகுதிகளும் ஒன்று - எனவே இங்கு ஏராளமான தென்னை நார்களில் இருந்து கயிறு தயாரிக்கும் தும்பு ஆலைகள் இயங்கி வருகின்றன இந்த கயிறு ஆலைகளில் இருந்து வெளிவரும் கயிரின் கழிவு பொருட்கள் அருகில் உள்ள தென்னந்தோப்புகளில் மலை போல் குவித்து வைப்பது வழக்கம் அந்த வகையில் மேலகிருஷ்ணன்புதூர் அடுத்து செம்பண் கரையில் உள்ள ஒரு தேங்காய் நார் தும்பாலையில் உள்ள கழிவுகளை ரங்கநாதன் என்பருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் மலை போல் குவித்து வைத்திருந்தனர் எதிர்பாராத விதமாக எற்பட்ட தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக கிளம்பியது .இது குறித்து அப்பகுதியில் உள்ள மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். நாகர்கோவிலில் இருந்து தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தியதால் பல ஏக்கர் தென்னை மரங்கள் தீ விபத்தில் இருந்து தப்பியது - தீ விபத்து குறித்து சுசீந்திரம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்