கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து காசிக்கு ஆன்மீக யாத்திரை தனியார் ரயில் சேவை இயக்கப்பட்டது!
1122 views
Subscribe கன்னியாகுமரி videosஇந்திய ரயில்வேயில் நவீன தொழில்நுட்பங்களை அறிமுகபடுத்தவும், பயணிகளுக்கு சர்வதேச தரத்திலான சேவையை வழங்குவதற்கு முக்கியமான வழி தடங்களை ரயில்வே நிர்வாகம் தனியாருக்கு ஒப்படைத்துள்ளது. அதன் வரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து ஆன்மீகதலமான காசிக்கு இன்று முதல்சேவையை துவங்க சென்னையை சேர்ந்த பிரபல போக்குவரத்து தனியார் நிறுவனம் ஒன்று, வாடகை அடிப்படையில் ரயிலை இயக்குகிறது.நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம், எர்ணாகுளம், பாலக்காடு, பொள்ளாச்சி,பழனி, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, எக்மோர், விஜயவாடா, விசாகப்பட்டினம் வழியாக காசி சென்றடைகிறது.மொத்தம் 10 நாட்கள் பயணத்தில் மூன்று நேரமும் சைவ உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 11 ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ள இந்த ரயிலில் சாதாரண பெட்டிகள் 3, டூ டயர் ஏசி 2, த்ரீ டயர் ஏசி 6 கோச்சுகள் இணைக்கப்பட்டுள்ளது.மொத்தம் 800 பேர் ஒரே நேரத்தில் பயணம் செய்யும் வசதி கொண்ட இந்த ரயிலில் படுக்கை வசதி கொண்ட இரண்டு வகுப்பு பெட்டியில் பயணம் செய்ய நபர் ஒருவருக்கு 21 ஆயிரம் ரூபாயும், த்ரீ டயர் ஏசி பெட்டியில் பயணம் செய்ய நபர் ஒருவருக்கு 31 ஆயிரத்து 600 ரூபாயும்,டபுள் டயர் ஏசி பெட்டியில் பயணம் செய்ய நபர் ஒருவருக்கு 35ஆயிரத்து 950 ரூபாயும் கட்டணம் நிர்ணயம் செய்யபட்டுள்ளது.மேலும் பஸ்கட்டணம், தங்கும் அறைகள் மற்றும் சைவ உணவு வழங்கப்படுகிறது.இந்த ரயிலில் ஒவ்வொரு பெட்டியிலும் தனியார் செக்கியூரிட்டி ஊழியர் மற்றும் ஹவுஸ்கீப்பிங் உதவியாளர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இச்சேவை இன்று நாகர்கோவிலில் இருந்து ஆன்மீக யாத்திரைக்கு தயாரா பயணிகளுடன் துவங்கப்பட்டது.