கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளாக மீன்வளத்துறை அதிகாரிகள் யாரும் இல்லை:மீனவர்கள் அவதி!
1028 views
Subscribe கன்னியாகுமரி videosகன்னியாகுமரி மாவட்டத்தில் கடலோர கிராம மீனவர்களை போன்று ஆரல்வாய்மொழி முதல் களியக்காவிளை வரை அனைத்து நகரப் பகுதிகளிலும் உள்நாட்டு மீனவர்கள் வாழ்ந்து வருகின்றனர் இவர்கள் மீன் சந்தைகளில் மீன் வியாபாரம் செய்தல் கடற்கரையில் இருந்து மீன்களை வாகனங்களில் எடுத்து வருதல் குளங்களில் மீன் வளர்ப்பு போன்ற பணிகளை செய்து வருகின்றனர் மீனவர்களுக்கு நல வாரியம் 2013 வரை நாகர்கோவிலில் இயங்கி வந்தது உள்நாட்டு மீனவர்கள் தங்களுக்கு தேவையான அரசின் திட்டங்கள் பயன்பாடுகள் கடன் உதவிகளை இந்த நலவாரியத் அதிகாரிகள் மூலமாக மனுக்களை கொடுத்து பெற்று வந்தனர் 2013க்கு பின்னர் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக மீன்வளத்துறை இணை இயக்குனர்கள் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை எனவே இந்த இரண்டு பணியிடங்களும் காலியாக உள்ளதால் அரசின் நலத்திட்டங்கள் நல வாரியத்தில் உள்ள பயன்பாடுகளை உள்நாட்டு மீனவர்கள் பெற முடியாத ஒரு சூழ்நிலையில் இருந்து வருகின்றனர் பலமுறை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றும் இதுவரை அந்த கோரிக்கைகள் கிடப்பில் உள்ளது எனவே கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி குழுமத்தின் இயக்குனர் அருட்பணியாளர் டென்ஷன் தலைமையில் மீனவர் சங்க பிரதிநிதிகள் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்