பத்தாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற அரசு பள்ளி மாணவர்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அரசு பள்ளியில் படித்து 10 -ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற பள்ளி மாணவர்கள், வீதி வீதியாக சாலைகளில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம். அரசு பள்ளியில் பயின்றாலும் அதிகமதிப்பெண் பெறலாம் என பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியது அனைவரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. அதில் தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டம் 95.99 சதவீதம் தேர்ச்சி பெற்று 4 வது இடம் பெற்றுள்ளது. மாவட்டத்தில் 131 அரசு பள்ளிகளில் 43 அரசு பள்ளிகள் 100 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில் நாகர்கோவில் மீனாட்சிபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு பயின்ற மாணவர்களில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் சிலர் தங்களது தேர்ச்சியை கொண்டாடும் விதமாக வீதி வீதி யாக சாலைகளில் இனிப்பு வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் பொது மக்களிடம் தனியார் பள்ளிகளில் அதிக மதிப்பெண் கிடைக்கும் என்ற எண்ணம் இருப்பதை மாற்றி அரசு பள்ளிகளில் பயின்றாலும் அதிக மதிப்பெண் எடுக்கலாம் என விழிப்புணர்வை ஏற்படுத்தியது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.