சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோவிலில் சித்திரை தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!
1080 views
Subscribe கன்னியாகுமரி videosகன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை, ஆவணி, மார்கழி, மாசி ஆகிய மாதங்களில் 10 நாட்கள் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம்.. அதுபோல் இந்த ஆண்டுக்கான சித்திரை தெப்பத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இத்திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. கொடியேற்று விழாவையொட்டி திருமுறை பாராயணமும், கொடியேற்றம் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், தேவார இன்னிசையும், சமய சொற்பொழிவு, பக்தி பல்சுவை நிகழ்ச்சி நடக்கிறது.விழா நாட்களில் தினமும் காலை சாமி வாகனத்தில் பவனி வருதல், சிறப்பு அபிஷேகம், சமய சொற்பொழிவு, இரவு வாகனத்தில் வீதி உலா வருதல், கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.