உறவினர் வீட்டுக்கு வந்து செல்வது போல பர்த அணிந்து வீட்டிற்குள் நுழைந்து கொள்ளை!
1040 views
Subscribe கன்னியாகுமரி videosகன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் இடலாக்குடி அருகே உறவினர் வீட்டுக்கு வந்து செல்வது போல பர்த அணிந்த 4 ஆண்கள் ஒரு பெண் உட்பட ஐந்து கொள்ளையர்கள் ஒரு வீட்டிற்குள் நுழைந்து வீட்டில் இருந்த உமர் பாபு என்பவரை கயிரால் கட்டி வைத்து 20 பவுன் தங்க நகைகளை பறிக்கும் போது கள்ளன் என கூச்சலிட்டதால் துப்பாக்கி அரிவால் டார்ச் லைட் ஆகியவற்றை போட்டு விட்டு கொள்ளையடித்த நகைகளை கொண்டு கொள்ளையர்கள் தப்பி ஓட்டம் - பெரும் பரபரப்பு - கோட்டார் போலீசார் விசாரணை - இன்று பகல் இவர்கள் இப் பகுதியில் நடமாடிய சிசிடிவி காட்சிகள் சிக்கியது -கன்னியாகுமரி மாவட்டத்தில் அண்மை காலமாக வீடு புகுந்து கொள்ளை கோவில் உண்டியல் உடைத்துக் கொள்ளை வழிப்பறி என கொள்ளை சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருகிறது அந்த வகையில் நாகர்கோவில் இடலக்குடி அருகே வேத நகரில் வசித்து வருபவர் உமர் பாபு (53) இவர் எட்டு மணியளவில் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.இவரது மனைவி யாஸ்மீன் மற்றும் குழந்தைகள் மருத்துவமனைக்கு சென்றதால் அவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார் திடீரென உறவினர் வீட்டுக்கு வந்து செல்வது போல பர்தா அணிந்த வந்த 4 ஆண்கள் ஒரு பெண் உட்பட ஐந்து பேர் ஒரு வீட்டிற்குள் நுழைந்து உமர் பாபுவை கயிறால் கட்டி வைத்து வீட்டிலிருந்து 20 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்த போது மருத்துவமனக்கு சென்ற உமர் பாபுவின் மனைவி மற்றும் மக்கள் திடீரென வந்து விட்டதால் கொள்ளையர்கள் என அவர்கள் கூச்சலிட்டனர் கையில் இருந்து அருவாள் துப்பாக்கி டார்ச் லைட்டை போன்ற ஆயுதங்களை போட்டுவிட்டு ஐந்து பேரும் தப்பி ஓடி தாங்கள் வந்த கேரளா பதிவென் கொண்ட காரில் ஏறி தப்பும் போது கார் சுவரில் மோதி விபத்து ஏற்பட்டது எனவே காரை விட்டு விட்டு தப்பி ஓடி விட்டனர் - பின்பு அப்பகுதியில் பொதுமக்கள் கூடிய நிலையில் அப்பகுதியில் சந்தேகம் படியான வாலிபர் சுற்றிவந்ததை அடுத்து அவரை பிடித்து பொதுமக்கள் போலீசாரிடம் ஓப்படைத்தனர். பின்பு கொள்ளையடிக்கப்பட்ட வீட்டை அப்பகுதி பொதுமக்கள் மற்றும் போலீசார் வந்து விசாரணை நடத்தினர் இந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது மக்கள் அதிகமாக வாழும் நெருக்கடி மிகுந்த பகுதியில் வீடு புகுந்து பர்தா கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது இது குறித்து கோட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இன்று பகல் கொள்ளை கும்பல் வேறு ஒரு வீட்டில் காரில் வந்து இறங்கி உள்ளே சென்ற சம்பவத்தில் உள்ள நடமாடிய சிசிடிவி காட்சிகள் சிக்கியது - அதன் அடிப்படையில் போலிசார் தேடி வருகின்றனர்