ரப்பர் தோட்ட குடியிருப்பு பகுதியில் புகுந்த 12 அடி நீளம் ராஜநாகம்!கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் உள்ள பால்குளம் ரப்பர் தோட்ட குடியிருப்பில் ராட்சத நாகம் பதுங்கி இருப்பதாக அப்பகுதியினர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர் அதனைத் தொடர்ந்து வனத்துறை வனக்காப்பாளர்கள் அங்கு விரைந்து சென்று குடியிருப்புக்குள் பதுங்கி இருந்த 12 அடி நீளம் உள்ள ராட்சத ராஜ நாகப் பாம்பை லாபகமாக பிடித்தனர் பின்னர் அங்கிருந்து மாறாமலை அடர்ந்த வனப் பகுதியில் ராஜ நாகத்தை கொண்டு விட எடுத்துச் சென்றனர்,மேலும் அப்பகுதியில் மலைத் தோட்ட தொழிலாளர்கள் அதிக அளவில் தங்கி இருப்பதால் இது போன்ற பாம்புகளை நடமாட்டம் அதிக அளவில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.