திருவள்ளுவர் சிலையை 18,000 பேர் சுற்றுலா படகில் சென்று ரசித்துள்ளனர்
கோடை விடுமுறையொட்டி புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபத்தை கடந்த இரண்டு நாட்கள் மட்டும் 18,000 பேர் சுற்றுலா படகில் சென்று ரசித்துள்ளனர் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பணிகள், சூரியன் உதயம் மற்றும் மறையும் காட்சிகள் காண்பதற்காக தினமும் ஆயிரக்கணக்கானோர் வருவது வழக்கம், அந்த வகையில் தற்போது கோடை விடுமுறை என்பதால் ஏராளமான உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் தினமும் படையெடுத்து வருகின்றனர், அதேபோல் கடலில் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை காண்பதற்காக சுற்றுலா படகுமூலம் செல்வார்கள், தற்போது கடந்த இரண்டு நாட்களில் மட்டும் திருவள்ளூர் சிலை விவேகானந்தர் மண்டபத்தை 18000 பேர் சுற்றுலா படகுகளில் கண்டு ரசித்துள்ளனர் என பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவித்துள்ளது, சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்