காஞ்சிபுரத்தில் கோவிலுக்கு செல்ல கோபுர வாசல் இருந்தும் பூட்டி வைக்கப்பட்டுள்ளது ஏன்?
1049 views
Subscribe காஞ்சிபுரம் videosகாஞ்சிபுரம் பஞ்சுப்பேட்டை தெருவில் அமைந்துள்ள ஓணகாந்திஸ்வரர் திருக்கோவிலுக்கு அருகாமையில் அமைந்துள்ள காந்தேஸ்வரர் சன்னதி எனும் இத்திருக்கோவிலுக்கு செல்ல வேண்டும் என்றால் ஓணகாந்திஸ்வரர் கோவில் நுழைவாயில் பகுதிக்கு சென்றே பக்தர்கள் செல்ல வேண்டும், காந்தேஸ்வரர் கோவிலுக்கு தனி கோபுரம் நுழைவாயில் அமைந்திருந்தும் பல ஆண்டுகளாகவே இந்த கோபுர நுழைவாயிலை பயன்படுத்தாமல் மற்றொரு பாதையை பயன்படுத்தி தான் இக்கோவிலுக்கு பக்தர்கள் சென்று வருகின்றனர்.இதற்கு முக்கிய காரணமாக சுமார் 20ஆண்டுகளுக்கு முன்னர் கோவில் நுழைவாயில் அருகே கட்டப்பட்டுள்ள கழிவறை தான்.கழிவறை அமைந்துள்ளதால் கோவில் நிர்வாகம் இந்த கோபுர வாசலை மூடிவிட்டது. குறிப்பாக இத்திருக்கோவிலுக்கு கோபுர வடிவில் நுழைவாயில் இருந்தும் ஆண்டுக் கணக்கில்,மூன்றுக்கும் மேற்பட்ட பூட்டுகளைக் கொண்டு பூட்டிக்கிடக்கின்றதால் மற்றொரு பாதையை பயன்படுத்தி தான் பக்தர்கள் இக்கோவிலுக்கு சென்று வருகின்றனர்.இந்நிலையில் இதுகுறித்து இத் திருக்கோயில் செயல் அலுவலர் தியாகராஜன் அவர்களை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு கேட்டப் போது,ஓணகாந்திஸ்வரர் கோவில் அருகாமையில் உள்ள இந்த காந்தேஸ்வரர் சன்னதி என்பது துணைக்கோவில் என்றும்,சுமார் ஆண்டுகளுக்கு முன்னதாக நுழைவு வாயில் அருகே கட்டப்பட்டுள்ள இந்த கழிவறையை அகற்றி விட்டு,மாற்று இடத்தில் புதிய கழிவறையை கட்டுவதற்காக தற்போது மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு விரைவில் அதற்கான பணிகள் துவக்கப்பட்டு,பக்தர்கள் செல்ல நுழைவு வாயில் திறக்கப்படும் என தெரிவித்தார்.