வரதராஜ பெருமாள் உடையவர் உற்சவம்!
1035 views
Subscribe காஞ்சிபுரம் videos108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் ஸ்ரீ உடையவர் எனும் ராமானுஜருக்கு சேவை சாதிக்கும் ஸ்ரீ உடையவர் சாற்று முறை உற்சவம் மிக விமர்சையாக நடைபெற்றது.ஸ்ரீ உடையவர் சாற்று முறை உற்சவத்தை ஒட்டி அத்திகிரி மலையில் இருந்து எழுந்தருளிய வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து வெண்பட்டு உடுத்தி, கையில் தங்க கிளி வைத்து, நவரத்தின திருவாரணங்கள் அணிவித்து, மல்லிகைப்பூ, மனோரஞ்சித பூ,செண்பகப்பூ மலர், மாலைகள் அணிவித்து, ஸ்ரீதேவி, பூதேவியுடன் மேளதாள, நாதஸ்வர வாத்தியங்கள் ஒலிக்க,வேத பாராயணம் கோஷ்டியினர் பாடி வர ஸ்ரீ உடையவர் சன்னதிக்கு எழுந்தருளினார்.உடையவர் சன்னதிக்கு எழுந்தருளிய வரதராஜ பெருமாளை எதிர் சேவை சாதித்து ராமானுஜப் பெருமான் சன்னதிக்குள் அழைத்துச் சென்றார்.ஸ்ரீ உடையவர் சன்னதியில் பல்வேறு பழங்களால் அலங்கரித்து அமைக்கப்பட்ட பழப்பந்தலில் எழுந்தருளிய வரதராஜ பெருமாள், ராமானுஜருக்கு காட்சியளித்து தான் அணிந்து வந்த மாலையை அவருக்கு வழங்கிய ஸ்ரீ உடையவர் சாற்றுமுறை உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.ஸ்ரீ உடையவர் சாற்று முறை உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வரதராஜ பெருமாளையும் ஸ்ரீ உடையவரையும் தரிசனம் செய்து வணங்கி வழிபட்டுச் சென்றனர்.