குன்றத்தூரில் திருநாகேச்சுவர சுவாமி கோயில் 101 ஆம் ஆண்டு தேர் திருவிழா!
1046 views
Subscribe காஞ்சிபுரம் videosகுன்றத்தூரில் திருநாகேச்சுவர சுவாமி கோயில் 101 ஆம் ஆண்டு தேர் திருவிழா.மூன்று ஆண்டுகளுக்கு பிறகு தேர் திருவிழா நடைபெறுவதால் ஏராளமான பக்தர்கள் பங்கேற்புதெய்வப்புலவர் சேக்கிழார் பிறந்த ஊராண குன்றத்தூரில் நவகிரக ராகு ஸ்தலங்களில் ஒன்றான அருள்மிகு காமாட்சி அம்மன் உடனுறை நாகேஸ்வர சுவாமி கோயில் உள்ளது. இந்த கோவிலின் பிரமோற்சவம் விழா கடந்த மாதம் 25 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது அதனை தொடர்ந்து சூரிய பிரபை, தங்க முலாம் அதிகார நந்தி சேவை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்று வந்தது. பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாளான இன்று மகா ரத உற்சவம் நடைபெற்றது. கோவில் அருகே அலங்கரித்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தேர் இன்று காலை வடம் பிடித்து இழுக்கப்பட்டது. இதில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், சேகர் பாபு, எம்.எல்.ஏ.செல்வபெருந்தகை ஆகியோர் கலந்து கொண்டு பக்தர்களுடன் சேர்ந்து தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். குன்றத்தூர் மற்றும் சென்னை அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் தேரின் வடத்தை பிடித்து இழுத்து சென்றனர். தேரானது பஜார் தெரு, பெரிய தெரு, துலுக்க தெரு என நான்கு மாட வீதிகளின் வழியாக தேர் படம் பிடித்து இழுத்துச் செல்லப்பட்டது. இறுதியாக தேரானது கோவிலில் முன்பு திருத்தப்பட உள்ளது அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்பதால் ஆங்காங்கே கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கும் தேர் வடம் பிடித்து இழுத்த பக்தர்களுக்கும் குளிர்பானங்கள், மோர் ஆகியவற்றை பொதுமக்கள் வழங்கினார்கள். தேரானது முக்கிய வீதிகளின் வழியாக வரும் நிலையில் போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த 2019 ஆம் ஆண்டு இந்த கோவிலின் தேரோட்டம் நடைபெற்றது ஊரடங்கு, கடந்தாண்டு கும்பாபிஷேக விழா என்பதால் கடந்த மூன்று ஆண்டுகளாக தேர் திருவிழா நடைபெறாமல் இருந்ததையடுத்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற தேர் திருவிழாவிற்கு ஏராளமான பக்தர்கள் வந்தது குறிப்பிடத்தக்கது.