செங்கல்பட்டு அடுத்த சிங்கபெருமாள் கோயில் தேர்த்திருவிழா
1032 views
Subscribe காஞ்சிபுரம் videosசெங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோயில் பகுதியில் எழுந்தருளியுள்ள பாடலாத்ரி நரசிம்மர் பெருமாள் கோவில் அமைந்துள்ளது.இந்த ஆலயம் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பல்லவர்கள் காலத்தில் கட்டப்பட்ட மிகப்பழைமான கோயில் ஆகும்.இந்த ஆலயம் மலையை குடைந்து ஒரேகல்லில் செதுக்கப்பட்ட பாடலாத்ரி நரசிம்மர் பெருமாள் என அழைக்கப்பட்டு வருகிறது. இந்த ஆலயம் தமிழக இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது.இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் வைகாசி மாத உத்ஸவம் 10நாட்கள் மிக விமரிசையாக நடைபெறும்.கடந்த மூன்று ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக எந்த வைபவங்களும் நடைபெறாமல் இருந்த நிலையில் இந்தாண்டு வைகாசி உத்ஸவ திருவிழா கடந்த 24ஆம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் நரசிம்மர் பெருமாள் அமர்ந்து வீதி உலாவாக பக்தர்கர்களுக்கு அருள் பாலித்தார். அதன் தொடர்ச்சியாக 7ஆம் திருநாளான இன்று திருத்தேர் விழா நடைபெற்றது இதில் நரசிம்மர் மற்றும் அகோபிலவள்ளி தாயார் சமேதமாக தேரினுள் அமர்ந்து திருத்தேர் வீதி உலா சென்றது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த சிறுவர் சிறுமிகள் முதல் முதியவர்கள் வரை ஏராளமான பக்தர்கள் தேரின் வடம்பிடித்து பெருமாளின் ஆசியினை பெற்று மகிழ்ந்தனர்.