அலுவலர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து கிராம நிர்வாக அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!
1057 views
Subscribe காஞ்சிபுரம் videosதூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் மணல் கடத்தலை தடுத்த காரணத்திற்காக படுகொலை செய்யப்பட்டார்.கிராம நிர்வாக அலுவலர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் உள்ள கிராம நிர்வாக அலுவலர் சங்கங்கள் போராட்ட களத்தில் இறங்கி உள்ளது.அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் மற்றும் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்கம் மற்றும் அதன் தோழமை சங்கங்கள் சார்பில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் மாவட்ட தலைவர் நவீன் குமார் தலைமையில், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் மாநில தலைமை நிலை செயலாளர் தியாகராஜன் முன்னிலையில்,காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் ஒன்று திரண்ட பெண்கள் உட்பட 200க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களும், வருவாய் துறை அலுவலர்களும்,கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் படுகொலைகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கிராம நிர்வாக அலுவலரை படுகொலை செய்த குற்றவாளிகளை கண்டுபிடித்து தூக்கு தண்டனை வழங்க வேண்டும், வருவாய் துறை அலுவலர்கள் படுகொலை செய்யப்படுவதை தடுக்கும் வகையில் பாதுகாப்பு சட்டம் கொண்டு வர வேண்டும் என கிராம நிர்வாக அலுவலர்கள் தமிழக அரசை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.