தாம்பரம் எரிமேடை சிதிலமடைந்து காணப்படுவதால் பொதுமக்கள் அவதி!
சென்னை அடுத்த குரோம்பேட்டை எம்.ஐ.டி மேம்பாலம் அருகே உள்ளது தாம்பரம் மாநகராட்சிக்கு சொந்தமான இறந்தவர்களை புதைக்கும் இடமாக 60 வருடங்களாக இருந்து வந்த நிலையில் பின்னர் எரியூட்டும் தகன மேடையாக சுமார் 20 வருடகாலமாக மக்கள் பயன்பாட்டிற்கு அமைக்கபட்டது. இந்நிலையில் தகன மேடை அருகே இறந்தவர்களின் ஈம காரியங்கள் செய்யும் பகுதியில் பல வருடங்களுக்கு முன்பு மேற்கூரை அமைக்கபட்டது. ஆனால் தற்போது இந்த மேற்கூரையானது சிதிலமடைந்து பொத்தல் பொத்தலாக மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கருதுகின்றனர். இது குறித்து தகன மேடை அலுவலர்களிடம் கேட்டதற்கு இன்னும் ஒரு மாதத்தில் சீர்செய்யபடுவதாக முன் முனுத்தவாரு தெரிவித்தார். ஆனால் பொதுமக்கள் மழைக்காலங்களில் ஈம சடங்கு செய்யும் இடங்களில் ஆங்காங்கே மழை நீர் கொட்டி தேக்கமடைவதால் இறந்தவர்களுக்கு சடங்கு செய்ய சங்கடமான ஒரு சுழல் இருப்பதாக தெரிவித்தார். எனவே தாம்பரம் மாநகராட்சி ஆணையாளர் இந்த ஈம சடங்கு செய்யும் மேற்கூரையை விரைவாக சீர்செய்யுமாறு சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கேட்டுகொண்டுள்ளனர் .