காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் தலைமையில் மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம்.
1017 views
Subscribe காஞ்சிபுரம் videosகாஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 51 வார்டுகளைச் சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் மாமன்ற கூட்டம் காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலக வளாக கூட்டங்கள் நடைபெற்றது.மாமன்ற கூட்டத்தில் திமுக கூட்டணி கட்சிகளை சேர்ந்த 38 மாமன்ற உறுப்பினர்களும்,அதிமுகவை சேர்ந்த 7 உறுப்பினர்களும்,பிஜேபியை சேர்ந்த 2 உறுப்பினர்களும்,பாமகவை சேர்ந்த 2 உறுப்பினர்களும்,தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒருவரும், சுயேட்சை உறுப்பினர் ஒருவரும் என 51 மாமன்ற உறுப்பினர்களும் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் தலைமையில் நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் கலந்து கொண்டனர்.மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் தலைமையில் நடைபெறும் மாமன்ற கூட்டத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்வதற்காககாஞ்சிபுரம் எம்பி க.செல்வம் எம்எல்ஏக்கள் க.சுந்தர், சி.வி.எம்.பி. எழிலரசன் ஆகியோர் மாமன்ற கூட்டத்தில் கலந்து கொண்டனர்.மாமன்ற கூட்டம் தொடங்கியவுடன் பார்வையாளர்களையும் செய்தியாளர்களையும் வெளியேறச் சொல்லி விட்டு கூட்டரங்கின் கதவை அடைத்துக் கொண்டு கூட்டம் நடைபெற்றதால் மாநகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.மாநகராட்சி மேயருக்கும், திமுக மாமன்ற உறுப்பினர்களுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதால் அதனை தீர்க்கவே எம்பி, எம்எல்ஏக்கள், பேச்சு வார்த்தை நடத்தி சமாதானம் செய்து வைக்க வந்துள்ளதாக அங்கிருந்தவர்கள் பேசிக் கொண்டனர்.மாலை 4மணிக்கு துவங்கிய இக்கூட்டமானது 7.30மணிக்கும் மேலாக சுமார் மூன்றரை மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.