காஞ்சிபுரத்தில் திருமணம் முடிந்த கையோடு மாப்பிள்ளையுடன் மணக்கோலத்தில் தேர்வெழுத வந்த மணப்பெண்!
1018 views
Subscribe காஞ்சிபுரம் videosகாஞ்சிபுரம் மாவட்டம் ஒட்டிவாக்கம் கோபி- வேண்டா தம்பதியரின் மகள் கிருத்திகா.இவர் காஞ்சிபுரம் கீழம்பி பகுதியிலுள்ள எஸ்.எஸ்.கே.வி மகளிர் கல்லூரி BA TAMIL மூன்றாம் படித்து வருகிறார்.இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் வெண்பாக்கள் தை அடுத்த வயலூர் பகுதியை சேர்ந்த முத்து-அஞ்சளா தம்பதியரின் மகன் மகேந்திரன் என்பவருக்கு திருமணம் செய்து வைக்க பெரியோர்களால் நிச்சியிக்கப்பட்டது.இந்த நிலையில் மணமகள் கிருத்திகா-விற்கு கடந்த ஒரு வார காலத்திற்கு முன்பு தொடங்கிய நடைபெற்றுவரும் இன்று இறுதி தேர்வாக கணிதம் பாடத்திற்கான தேர்வு நடைபெற்றது.திருமண தேதி இன்று உறுதியான நிலையில் இருவருக்கும் திருமணமானது காலை 7.30-9.00 மணியளவில் நடைபெற்றது.திருமணம் முடிந்த கையோடு தனது மனைவியான புதுமணப்பெண்ணை தேர்வு எழுத வைப்பதற்காக இருவரும் மணக்கோலத்தோடு மணமகனே தேர்வு மையமான எஸ்.எஸ்.கே வி கல்லூரிக்கு காரில் அழைத்து வந்து தேர்வறைக்கு அனுப்பி வைத்தார்.கல்வியின் முக்கியத்துவம் உணர்ந்து மணமகன் தனது மனைவியை தேர்வறைக்கு அழைத்து வந்தது விட்டதும்,மணகோலத்தில் இருவரும் கல்லூரிக்கு வந்ததிருந்தது அங்கிருந்தோரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.