காஞ்சிபுரம் சாலையில் திடீர் சாலை மறியல்; போலிசார் பேச்சு வார்த்தை.!
Subscribe காஞ்சிபுரம் videos
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கிராண்டி புரம் ஊராட்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பகுதியில் கடந்த சில மாதங்களாக இங்குள்ள பொதுமக்களுக்கு 100 நாள் வேலைத்திட்டம் முறையாக வழங்கப்படவில்லை என்றும், இதே போன்று இந்த திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக கூறியும் ,அந்த பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் கோவிந்தாபுரம் என்னும் பகுதியில் உள்ள காஞ்சிபுரம் - திண்டிவனம் சாலையில் திடீரென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரோசனை போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் தொடர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்படும் ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன்மற்றும் துணை சார்ந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வெகு நேரமாகியும் வராததால் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் ஆவேசம் அடைந்து காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.