மறுவாழ்வு இல்லத்திற்கு அடிப்படை வசதிகளை செய்த ஸ்டாலின்சென்னையிலிருந்து செங்கல்பட்டு வழியாக விழுப்புரம் செல்லும் வழியில் செங்கல்பட்டு அருகே பரனூரில் உள்ள அரசு தொழு நோய் மறுவாழ்வு இல்லத்தில் திடீரென முதியவர்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்சந்தித்தார்.1971 ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்த போது பரனூரில் அரசு மறுவாழ்வு இல்லம் துவங்கப்பட்டது,தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பிறகு முதல் முறையாக பரனூரில் உள்ள அரசு மறுவாழ்வு இல்லத்தில் முதியவர்களை சந்தித்துமறுவாழ்வு இல்லத்தில் உள்ள 109 முதியவர்களுக்கு புடவை, லுங்கி, போர்வைகளை வழங்கினார்.சென்னையிலிருந்து கடலூர் கள்ளக்குறிச்சி விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு கள ஆய்விற்காக சாலை மார்க்கமாக தமிழக முதல்வர் சென்ற போது செங்கல்பட்டு அடுத்த பரலூரில் உள்ள தொழுநோயாளிகள் நல்வாழ்வு மையத்தில் ஆய்வு மேற்கொண்டு நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்கினார்.இதில் மறுவாழ்வு மையத்தில் கட்டிடங்கள் சிதிலமடைந்து உள்ளதையும், குப்பைகளை அகற்றுவதற்கு போதிய வசதிகள் இல்லாததையும் அவர் சுட்டிக்காட்டினார். மறுவாழ்வு மைய கமிட்டி தலைவர் ராஜா இல்லத்தரசிகளுக்கு செலவீனத்தொகையை உயர்த்தி வழங்கியதற்கு நன்றி கூறினார். மேலும் இரண்டு மூன்று வார்டுகளுக்கு புதிய வர்ணம் பூசுவதற்கும்இல்லத்தரசிகளுக்கு தேனீர் வழங்கும் போது ரொட்டியும் சேர்த்து வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனு அளிக்கப்பட்டது.நீண்ட நாள் கோரிக்கையான அடிப்படை வசதிகளை செய்து தரகோரியும் மனு அளித்தனர்.