ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய ஆலோசகர்கள் சந்திப்பு வெளியீடு!
1064 views
Subscribe காஞ்சிபுரம் videosகாஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாதாந்திர ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் திமுக சேர்மன் எஸ்.டி.கருணாநிதி தலைமையில் நடைபெற்றது. இதில் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தை சேர்ந்த 16 கவுன்சிலர்கள், வட்டார வளர்ச்சி அதிகாரிகள், வேளாண்மை துறை, வருவாய்த்துறை, போன்ற துறைகளை சார்ந்த அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றனர். அப்போது அந்தந்த வார்டுகளை சேர்ந்த கவுன்சிலர்கள் தங்களது பகுதியில் உள்ள பாதிப்புகளை அதிகாரிகளிடம் கோரிக்கையாக முன் வைத்தனர்.பின்னர் கூட்டத்தில் பேசிய 2வது வார்டு விசிக கவுன்சிலர் தியாகராஜன் எனது வார்டில் ஒன்றரை வருடங்களாக வளர்ச்சி பணிகளுக்கு எந்த ஒரு நிதியும் ஒதுக்கப்படவில்லை,இதன் காரணமாக சாலை, குடிநீர், தெரு விளக்கு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, போன்ற அடிப்படை வசதிகள் கூட பொதுமக்களுக்கு செயல்படுத்த இயலவில்லை என்றும்,இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக சரமாரியாக திமுக சேர்மன், பிடிஓ பாலாஜி, ஆகியோரிடம் முறையிட்டு கேள்வி எழுப்பி புகார் தெரிவித்தார்.மேலும் தன்னை நம்பி வாக்களித்த பொதுமக்களுக்கு எந்த ஒரு நல பணியும் தன்னால் செயல்படுத்த இயலவில்லை என தனது முழு ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். இதே நிலை தொடர்ந்து நீடித்தால் தான் வார்டு கவுன்சிலராக இருப்பதற்கு தகுதி இல்லை என நோட்டீஸ் அடித்து மக்களுக்கு விநியோகம் செய்ய இருப்பதாக கூறியதால் கூட்டத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.மேலும் கூட்ட முடிவில் திமுக சேர்மன், துணை சேர்மன் ஆகியோர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளிக்க சென்ற போது மனுவை சேர்மன் வாங்கி கொண்டது என்பது குறிப்பிடப்பட்டது.