படப்பையில் பாலாறு குடிநீர் குழாய்யில் ஏற்பட்ட உடைப்பால் பல லட்சம் லிட்டர் பாலாறு நீர் வீண்.!!
1026 views
Subscribe காஞ்சிபுரம் videosகாஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே படப்பை பகுதியில் பாலாறு குடிநீர் குழாயில் நான்கு இடத்தில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தாம்பரம் மாநகராட்சிக்கு செல்ல வேண்டிய பல லட்சம் லிட்டர் குடிநீர் தினமும் நெடுஞ்சாலையில் ஆறாய் வழிந்தோடி வீணாகிறது.தாம்பரம் மாநகராட்சி கூட்டு குடிநீர் திட்டத்திற்கு வாலாஜாபாத் அருகே மூன்று இடங்களில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு மேலச்சேரி நீரேற்றும் நிலையத்தில் இருந்து தினமும் ஒரு கோடி லிட்டர் குடிநீர் எடுக்கப்படுகிறது.இதற்காக வண்டலுார்--வாலாஜாபாத் நெடுஞ்சாலையில், ஒரகடம், செரப்பணஞ்சேரி, ஆரம்பாக்கம், படப்பை, கரசங்கால், மண்ணிவாக்கம் வழியே ராட்சத குழாய் பதிக்கப்பட்டு தாம்பரம் மாநகராட்சிக்கு குடிநீர் செல்கிறது. இந்நிலையில் இந்த குடிநீர் குழாய் முறையான பராமரிப்பின்றி உள்ளது. இதனால் வாலாஜாபாத் அருகே மேலச்சேரி நீரேற்று நிலயத்தில் இருந்து பம்ப் செய்து அனுப்பப்படும் நீர் அதிக அளவு அழுத்தம் காரணமாக செரப்பணஞ்சேரி, ஆரம்பாக்கம், படப்பை, கரசங்கால் பகுதியில் உள்ள குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு தினமும் பல லட்சம் லிட்டர் பாலாறு நீர் நெடுஞ்சாலையில் ஆறாய் ஓடி வீணாகிறது.மேலும் குழாய் உடைப்பு ஏற்பட்ட இடத்தில் வாகனங்கள் சென்று பெரிய பள்ளம் ஏற்பட்டு விபத்து நடக்கிறது.தண்ணீர் வீணாவதால் தாம்பரம் மாநகராட்சியில் கோடை கலாத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் சிரமப்படுகின்றனர்.இதனால் கூடுதலாக மாற்று திட்டத்திற்கு செலவு செய்து மக்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்யக்கூடிய அவல நிலை உள்ளது.தாம்பரம் மாநகராட்சி நிர்வாகத்தினர் வாலாஜாபாத்திலிருந்து வரும் பாலாறு குடிநீர் குழாயை முறையாக ஆய்வு செய்து உடைப்பு ஏற்பட்ட இடங்களை கண்டறிந்து விரைந்து சீரமைக்க வேண்டும் என பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது.குடிநீர் குழாய் உடைப்பு குறித்து தாம்பரம் மாநகராட்சி ஆணையர் அழகுமீனாவை தொடர்பு கொண்டு கேட்டபோது, விரைவில் உடைப்புகள் அனைத்தும் சரி செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.