உலகப் புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு தனியார் செவிலியர் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி!
1049 views
Subscribe காஞ்சிபுரம் videosதமிழக முழுவதும் மே மாதம் 31 ஆம் தேதி உலக புகையிலை எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு புகைப் பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் தனியார் செவிலியர் கல்லூரி மாணவர்கள் உலகப் புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடத்தினர். இந்த விழிப்புணர்வு பேரணியை ஸ்ரீபெரும்புதூர் டிஎஸ்பி சந்திரதாசன், காவல் ஆய்வாளர் பரந்தாமன் ஆகியோர் பங்கேற்று கொடி அசைத்து துவக்கி வைத்தார்.இதில் 100க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் புகை பிடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து ஒலிபெருக்கி மூலம் பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் பாதுகாப்பீர் பாதுகாப்பீர் உங்கள் நுரையீரலை பாதுகாப்பீர், அனைத்து புகையும் நமக்கு பகையே, வேண்டாம் புகையிலை வேண்டாம் புற்றுநோய், போன்ற பல்வேறு விழிப்புணர்வு வசனங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு ஸ்ரீபெரும்புதூர் நகரின் முக்கிய சாலையில் விழிப்புணர்வு பேரணி சென்றனர். இதில் தனியார் கல்லூரி ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.