வெங்காய மூட்டைகளை அள்ளி சென்ற பொது மக்களால் பரபரப்பு
1017 views
Subscribe காஞ்சிபுரம் videosவண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சர்வீஸ் சாலை, குன்றத்தூர் அருகே சாலையின் ஓரத்தில் மூட்டை, மூட்டையாக வெங்காய முட்டைகள் கொட்டி கிடந்தது. அந்த வழியாக சென்று வாகன ஓட்டிகள் இதனை கண்டதும் வாகனங்களை நிறுத்திவிட்டு இறங்கி சென்று ஒவ்வொருவராக வெங்காய மூட்டைகளை எடுக்க ஆரம்பித்தனர். யாரும் கேட்க வராததால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் தங்களுக்குள் போட்டி போட்டுகல் கொண்டு சாலையின் ஓரத்தில் கொட்டி கிடந்த வெங்காய மூட்டைகளை தங்களது இரு சக்கர வாகனத்தில் எடுத்து வைத்து கொண்டு வேக, வேகமாக உற்சாகத்துடன் கிளம்பி சென்றனர் சிலர் தங்களது இருசக்கர வாகனத்தில் மூன்று முதல் நான்கு மூட்டைகளை சர்வ சாதாரணமாக எடுத்து கொண்டு சென்றனர். பொதுமக்கள் எடுத்த வரை யாரும் வந்து கேட்காததால் அந்த வழியாக வந்த பொதுமக்கள் மிகுந்த உற்சாகத்துடன் அங்கு கொட்டி வைக்கப்பட்டிருந்த வெங்காய மூட்டைகளை நொடி பொழுதில் தூக்கி சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது வெங்காய மூட்டைகளை கொட்டி சென்றது யார் எதனால் கொட்டினார்கள் என்பது குறித்து குன்றத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது