2000ரூபாய் நோட்டுகளை மாற்ற குவிந்து வரும் பொதுமக்கள்!
1030 views
Subscribe காஞ்சிபுரம் videosஇந்தியாவில் பொதுமக்களிடம் புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறுவதாக கடந்த 19ஆம் தேதி ரிசர்வ் வங்கி அறிவித்தது.மேலும் இன்று முதல் செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி வரை பொதுமக்கள் தங்கள் கையில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்லலாம் எனவும்,மக்கள் நாள் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் வரையிலான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மட்டுமே வங்கிகளில் மாற்ற முடியும் எனவும் ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது.மேலும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் மாற்றுவதற்கு பிரத்யேகமான விண்னப்ப படிவங்களும் வெளியிடப்பட்டு,அந்த படிவத்தில் பணத்தை மாற்ற செல்லும் வங்கியின் பெயர்,அந்த வங்கியில் கணக்கு வைத்து இருந்தால் அதன் எண் உள்ளிட்ட விவரங்களும், ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம் போன்ற அடையாள அட்டைகளில் ஏதேனும் ஒன்றின் அசலைக் காட்டியும், வங்கியில் காட்டும் அடையாள அட்டையின் எண்ணையும் விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.இந்நிலையில் இன்று முதல் 2ஆயிரம் நோட்டுகளை வங்கிகளில் பொது மக்கள் மாற்றிக்கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளதை அடுத்து காஞ்சிபுரத்தில் இன்று காலை முதலே வங்கி திறந்த உடன் பல்வேறு வங்கிகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்ற பொது மக்கள் வருகைப்புரிந்து வருகின்றனர்.காஞ்சிபுரம் நெல்லுக்கார தெருவிலுள்ள ஸ்டேட் பாங்க் வங்கியில் இன்று காலை முதலே பொது மக்கள் வருகை புரிந்து தங்களிடம் உள்ள 2ஆயிரம் ரூபாயை நோட்டுகளை வங்கி ஊழியர்களிடம் கொடுத்து விட்டு அதற்கு மாற்றாக ரூ.500நோட்டுகளாய் பணத்தை பெற்று வருகின்றனர்.இதேபோல் காஞ்சிபுரத்திலுள்ள அனைத்து முன்னணி வங்கிகள்,தனியார் வங்கிகள் என அனைத்து வங்கிகளிலும் 2ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிட பொது மக்கள் குவிந்து வருகின்றனர்.மேலும் 2ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை மாற்ற பொது மக்களின் வசதியிற்க்காக தனி கவுண்டர்கள் அமைக்கப்பட்டும், அடிப்படை வசதிகளும் வங்கி நிர்வாகம் சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் வங்கியில் எத்தனை 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை செலுத்துகிறோம் என்பதையும் குறிப்பிட்டு வாடிக்கையாளர் கையொப்பம் இட்டு விண்ணப்ப படிவத்தை அளித்து 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்லலாம். மேலும் வங்கியில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை ஒரு நாளில் 20 ஆயிரம் தான் மாற்ற முடியும் என்ற கட்டுபாடுகள் உள்ள நிலையில், வங்கிகளில் டெபாசிட் செய்வதற்கு எந்த கட்டுபாடுகளும் விதிக்கப்படவில்லை.