பேனாசிலையும் வராது பரந்தூர் விமான நிலையமும் வராதுசென்னையின் இரண்டாவது புதிய பசுமைவெளி விமான நிலையமானது காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைக்கப்படும் என மத்திய மாநில அரசுகள் அறிவித்துள்ளது.மேலும் பரந்தூர்,ஏகனாபிரம்,நெல்வாய்,144 தண்டலம்,உள்ளிட்ட 13 கிராமங்களை உள்ளடக்கிய சுமார் 4800 ஏக்கர் பரப்பளவில் இந்த விமாம நிலையம் அமைக்கப்படுவதினால் குடியிருப்புகள், விளை நிலங்கள்,நீர் நிலைகள் என அனைத்தும் கையகப்படுத்தப்படும் என்பதினால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கிராம மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். மேலும் இக்கிராம மக்களுக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சிகளும் தங்களது ஆதரவை அளித்தும்,தொடர்ந்து இந்த பரந்தூர் புதிய பசுமைவெளி விமான நிலையத்தை எதிர்த்து வருகின்றனர்.இந்நிலையில் காஞ்சிபுரம் பெரியார் தூண் அருகே நாம் தமிழர் கட்சியின் சார்பாக இந்த பரந்தூர் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுக்கூட்டமானது நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்றது.முன்னதாக செய்தியாளர்கள் சந்திப்பின் போது நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவிக்கையில்,பொதுமக்கள் அஞ்சுவதால் தமிழகத்தில் எட்டு வழி சாலையும், பரந்தூர் விமான நிலையம் கட்டப்போவதுமில்லை,நாங்கள் கட்டவிடப்போவதும் இல்லை என்றும்,மக்கள் கோரிக்கைகளை ஏற்று போராட்டங்களை அரசு கவனத்தை செலுத்தி தீர்வு காண்பதில்லை, மக்கள் மது கடைகளோ, வானூர்தி நிலையம் வேண்டாம் என்பதில் அரசு செய்வதற்கு தயாராக உள்ளது என்றும்,சென்னை விமான நிலையத்தில் புதிதாக பாரதப் பிரதமர் திறந்த விமான நிலையம் பயன்பாட்டில் இல்லை, அரசு விமானமே இல்லாத இடத்திற்கு விமான நிலையம் எதற்கு என அவர் கேள்வி எழுப்பினார்.மேலும் அவர் தெரிவிக்கையில்,ரூ.20 ஆயிரம் கோடியில் புதிய விமான நிலையம் கட்டுவதால் அதில் கமிஷன் தவிர வேற எதுவும் வராது என்றும்,கடலில் பேனா சிலை கட்டுவதற்கு தேதி அறிவிக்கும் பொழுது பேனாவை எதிர்க்கும் தேதியும் நான் அறிவிப்பேன் என்றும்,மக்கள் வாழ்விடம் எல்லாம் ஆக்கிரமிப்பு என இடிக்கும் பொழுது கடல் பகுதியை ஆக்கிரமிப்பு செய்து பேனா சிலை வைப்பது ஆக்கிரமிப்பு இல்லையா? என கேள்வியை அவர் எழுப்பினார்.மேலும் தமிழ்நாடு வளர்ச்சி என பேசுவது பள்ளியில் காலை சிற்றுண்டி, இலவச பேருந்து, படிக்கும் மகளிர்க்கு ரூ.1000 என மக்களை கையேந்தும் நிலைக்கு வைத்துவிட்டு வளர்ச்சி என பேசுவது தவறு, கல்லூரி கட்டணத்தை அரசு ஏற்றுக் கொள்ளட்டும் பேருந்து பயண டிக்கெட்டை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்றும்,மத்திய, மாநில அரசு கார்ப்பரேட் நிறுவனங்களின் வளர்ச்சிக்காகவே ஆட்சி நகர்கிறதை தவிர மக்களின் நகரனுக்காக யோசிப்பதும் இல்லை என்றும்,முதலமைச்சர் ஆய்வுக்கு செல்லும் பொழுது கொடுக்கும் கோரிக்கை மனுக்களை உடனடியாக நிறைவேற்றும் முதலமைச்சர் தந்தை குடிப்பதற்காக தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்களின் கோரிக்கையை நிறைவேற்றினால் நன்றாக இருக்கும் என்றும்,பகுத்தறிவு சிந்தனை, சமூக நீதி இதைப் பற்றி பேசிவிட்டு கோவிலுக்குள் தாழ்த்தப்பட்டவர்களை அனுமதிக்க மறுத்த கோவிலை திறந்து அரசு வழிபட அனுமதிக்காமல் கோவிலை பூட்டி செல்வது எந்த வகையில் தீர்வாகும். வேங்கை வாசலில் தற்போது வரை நடவடிக்கை இல்லை,சமூகநீதி காவலர்கள் ஆட்சிக்கு வந்ததால்தான் தற்பொழுது இது போன்ற சம்பவம் அதிகமாக நடைபெறுகிறது நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.