பேருந்து நிலையத்தில் உரிய இருக்கை வசதியின்றி பயணிகள் அவதி!
1069 views
Subscribe காஞ்சிபுரம் videosகோவில் நகரமாகவும்,சுற்றுலா தலமாகவும்,பட்டு நகரமாகவும் விளங்க கூடிய காஞ்சிபுரத்திலுள்ள பேரறிஞர் அண்ணா பேருந்து நிலையத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொது மக்கள் வருகை புரிகின்றனர். வெளியூர்,வெளி மாநிலங்கள் செல்வதற்கும், பல்வேறு பணி நிமித்தமாகவும் இந்த பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் மூலம் பயணிகள் பேருந்தில் பயணம் மேற்கொள்கின்றனர்.இந்த பேருந்து நிலையத்திலிருந்து வேலூர், அரக்கோணம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, சென்னை,பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு வெளி மாவட்ட வெளி மாநிலங்களுக்கு நாள்தோறும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது.எப்போதும் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியான இந்த பேருந்து நிலையத்தில், காஞ்சிபுரம் அருகிலுள்ள களக்காட்டூர், குருவிமலை, உத்திரமேரூர், வாலாஜாபாத் பரந்தூர்,காரை போன்ற பல்வேறு கிராமங்களுக்கு செல்ல பேருந்து நிலையத்திற்கு வருகை புரியும் பயணிகள் பேருந்துக்காக காத்திருக்கும் நேரத்தில் பேருந்து நிலையத்தில் அமர உரிய இருக்கை வசதி இன்றி நீண்ட நேரம் கால் கடக்க நிற்கும் சூழல் உருவாகியுள்ளதால் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.மேலும் அவ்வாறு நீண்ட நேரம் கால் கடக்க நிற்க முடியாதவர்கள் சிலர் தரையில் அமருகின்ற நிலைகளும் காணப்படுகின்றது.எனவே இந்த பேருந்து நிலையத்தில் பயணிகள் அமருவதற்கு உரிய இருக்கை வசதிகள் அமைத்து தர வேண்டும் என்பதே பேருந்து பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.