வரதராஜப் பெருமாள் கோவிலில் உண்டியல்கள் திறப்பு
1048 views
Subscribe காஞ்சிபுரம் videosகோவில் நகரமான காஞ்சிபுரத்திலுள்ள உலகப்புகழ் பெற்ற அத்திரவரதர் கோவில் என்றழைக்கப்படும் வரதராஜப் பெருமாள் கோவிலில் 3மாதங்களுக்கு பின்னர் 7 நிரந்தர உண்டியல்கள் திறப்புரூ.38 இலட்சத்து 83ஆயிரத்து 193ரூபாயும்,124.600கிராம் தங்கமும்,525.180கிராம் வெள்ளியும் பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்தியுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தகவல்---------------------------------------------------கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் உலக பிரசித்திப்பெற்றதும்,அத்தி வரதர் கோவில் என்றழைக்கப்படும் வரதராஜப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது.இக்கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகைப்பிரிந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.அவ்வாறு சாமி தரிசனம் மேற்கொள்ளும் பக்தர்கள் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள மூலவர், உற்சவர், தாயார், சக்கரத்தாழ்வார், லட்சுமி நரசிம்ம சுவாமி உள்ளிட்ட சன்னதிகளில் வைக்கப்பட்டுள்ள 7 நிரந்தர உண்டியலில் தங்களது நேர்த்தி கடன் நிறைவேறிடவும், நிறைவேறிய நேர்த்தி கடனுக்காகவும், சாமிக்கு காணிக்கை செலுத்தும் விதமாக ரொக்கப்பணம்,தங்கம்,வெள்ளி பொருட்கள் உள்ளிட்டவற்றை உண்டியல் காணிக்கையாக செலுத்தி செல்வது வழக்கம்.அவ்வாறு பக்தர்கள் உண்டியல்களில் செலுத்தும் காணிக்கைகள் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை எண்ணப்படுவது வழக்கம்.அவ்வகையில் மூன்று மாதங்களுக்கு பிறகு இக்கோவிலில் உள்ள 7நிரந்தர உண்டியல்களில் திறக்கப்பட்டு எண்ணும் பணியானது இன்று கோவில் வளாகத்தில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் கோவில் அலுவலர்களுடன் சேர்ந்து தொண்டு நிறுவன ஊழியர்களும் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டதில் ரூ.38 இலட்சத்து 83ஆயிரத்து 193ரூபாயும் ரொக்கமும், 124.600கிராம் தங்க நகைகளும், 525.180கிராம் வெள்ளி பொருட்களும் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியிருந்தனர் எனவும்,அவ்வாறு பக்தர்களிடம் காணிக்கையாக பெறப்பட்ட பணம் முழுவதும் எண்ணப்பட்டு வங்கியில் வைப்பு நிதியாக செலுத்தப்படுகிறது எனவும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.