மேம்பாலத்தில் அடிக்கடி கனரக வாகனங்கள் பழுதாகி நிற்பதால் வாகன ஓட்டிகள் அவதி
1122 views
Subscribe காஞ்சிபுரம் videosசெவிலிமேடு பாலாற்று மேம்பாலத்தின் மீது நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது.இந்நிலையில் செய்யாறு மாங்கால் பகுதியில் தொழிற்பேட்டைகளும் கல்குவாரிகளும் அதிகம் இருப்பதால் அதிக அளவில் கனரக லாரிகள் மேம்பாலத்தில் மீது சென்று வருகிறது.மேம்பாலத்தின் மீது செல்லும் கனரக லாரிகள் மற்றும் வாகனங்கள் அடிக்கடி பழுதாகி மேம்பாலத்தில் நின்று விடுவதால் வந்தவாசி- காஞ்சிபுரம் சாலையில் இருபுறமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பாதிப்பு அடைகிறது.