'மீண்டும்-மஞ்சள் பை'பிளாஸ்டிக் பைக்கு குட்-பாய்.. விழிப்புணர்வு!
1053 views
Subscribe காஞ்சிபுரம் videosதமிழக அரசானது பிளாஸ்டிக் எனும் நெகிழிப் பொருட்களை பயன்படுத்துவதற்கு தடை விதித்துள்ளது.இந்த பிளாஸ்டிக் பொருட்களை பொதுமக்கள் பயன்படுத்துதலை தவிர்க்க பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனையகங்களில் சோதனை நடத்தி அக்கடைக்கு அபராதம் விதிப்பதோடு அப்பொருட்களை பறிமுதல் செய்து பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டினை குறைத்து வருகின்றன.மேலும் வீடுகளில் சேகரமாகும் குப்பைகளை தரம் பிரித்து மக்கும் குப்பை,மக்காத குப்பையென தரம் பிரித்து வாங்குவது,நெகிழி பைகளை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள்,அதனால் சந்திக்கக்கூடிய விளைவுகள் குறித்து எடுத்துரைக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தாது மீண்டும் மஞ்சள் பை-யினை பயன்படுத்தும் வகையில் மீண்டும் மஞ்சள் பை என்கிற தலைப்பில் பொதுமக்களிடையே தொடர் விழிப்புணர்வானது ஏற்படுத்தப்பட்டு வருகிறது.அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து நடத்தும் மீண்டும் மஞ்சள் பை விழிப்புணர்வு மினி மாரத்தான் காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கிலிருந்து நடைபெற்றது. காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவிஎம்பி.எழிலரசனால் கொடி அசைத்து துவக்கி வைக்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் சிவிஎம்பி.எழிலரசன் பொதுமக்களிடையே பிளாஸ்டிக் பயன்படுத்துவதனால் சந்திக்கும் விளைவுகள் குறித்து எடுத்துரைத்து நெகிழி பொருட்களை பயன்படுத்த மாட்டோம் என்கிற போன்ற வாங்க உறுதிமொழி ஏற்க வைத்து பின்னர் மினி மாரத்தான்-ஐ துவக்கி வைத்தார்.300-க்கும் மேற்ப்பட்ட பள்ளி,கல்லூர் மாணவ,மாணவிகள் பங்கேற்புடன் காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கிலிருந்து தொடங்கிய இந்த மினி போட்டி நெல்லுக்கார தெரு,காமராஜர் வீதி,மூங்கில் மண்டபம்,மேட்டு தெரு வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் முடிவுற்று பொது மக்களிடையே மீண்டும் மஞ்சள் பை விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.