திருமழிசை டாஸ்மாக் கிடங்கில் மதுபானங்களை ஏற்றி செல்லும் வாகன ஒப்பந்தம் ரத்து!
1108 views
Subscribe காஞ்சிபுரம் videosதிருமழிசை டாஸ்மாக் கிடங்கில் மதுபானங்களை ஏற்றி செல்லும் வாகன ஒப்பந்தம் ரத்து.அமைச்சர் செந்தில் பாலாஜி அவரது தம்பிக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என கற்பூர சூடம் ஏற்றி கண்ணீர் மல்க கடவுளிடம் கோரிக்கை வைத்த ஒப்பந்ததாரரால் பரபரப்பு.திருமழிசை டாஸ்மாக் கிடங்கில் இருந்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு வாகனங்கள் மூலம் மதுபானங்களை ஏற்றி செல்வது வழக்கம் இந்த நிலையில் இன்று வழக்கம்போல் மதுபானங்களை ஏற்றி செல்ல பாஸ்கரன் என்பவரது வாகனங்கள் உள்ளே வந்தபோது புதிய டிரான்ஸ்போர்ட் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதால் ஏற்கனவே இருந்த பாஸ்கரன் வாகனங்களுக்கு மதுபானங்கள் ஏற்றி செல்ல அனுமதி வழங்கப்படாமல் இருந்ததால் வாகனங்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படாததால் டாஸ்மாக் கிடங்கிற்கு வந்த வாகனங்கள் சாலையிலேயே நின்று கொண்டிருந்தது.இதனால் அதிர்ச்சி அடைந்த பாஸ்கரன் நூற்றுக்கும் மேற்பட்ட வக்கீல்கள் உடன் டாஸ்மாக் கிடங்கு முன்பு ஒன்று திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து 50க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். கடந்த 25 ஆண்டுகளாக இவர் இந்த ஒப்பந்த பணியை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் வேறு ஒரு டிரான்ஸ்போர்ட் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதனால் தற்போது தங்களை உள்ளே விட அனுமதிக்கவில்லை என்றும் கடந்த பிப்ரவரி மாதம் தங்களது ஒப்பந்தம் முடிவடைந்ததாக அதிகாரிகள் கூறிய நிலையில் புதிய டிரான்ஸ்போர்ட் வாகனங்கள் வரும் வரை மதுபானங்களை எடுத்து செல்ல வாகனங்களை இயக்கி தருமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டதின் பேரில் தாங்கள் வாகனங்களை இயக்கியதாகவும் அதுமட்டுமின்றி தற்போது தங்களுக்கு நிலுவை தொகையாக ரூ.5 கோடி வரை இருப்பதால் அதனை உடனடியாக தரவேண்டும் எனக் கூறி டாஸ்மாக் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார் அதில் அதிகாரிகள் உயர் அதிகாரியிடம் பேசிவிட்டு உரிய தகவல் தெரிவிப்பதாக கூறிய நிலையில் பழைய ஒப்பந்ததாரர் பாஸ்கர் வெளியே வந்து கண்ணீர் மல்க பேசினார் பின்னர் அங்கிருந்த முனீஸ்வரன் கோவிலுக்கு சென்று கற்பூரம் சூடம் ஏற்றி அமைச்சர் செந்தில் பாலாஜி அவரது தம்பி அசோக் ஆகிய இருவருக்கும் கடவுள் தான் தண்டனை தர வேண்டும் 25 ஆண்டுகள் செய்த பணியை பிடுங்கி கொண்டு தன்னை வெளியே அனுப்புவதாகவும் நீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு வந்தால் மட்டுமே மீண்டும் இங்கு வந்து சந்திப்பேன் என அழுதபடியே கடவுளிடம் முறையிட்டபடி அங்கிருந்து கிளம்பி சென்றார். மேலும் 25 ஆண்டுகள் செய்த பணி ரத்தான நிலையில் மிகுந்த கண்ணீருடன் மயங்கிய நிலையில் அங்கிருந்து கிளம்பி சென்றது கான்போரை கண் கலங்க வைத்தது. தற்போது ஒப்பந்தம் ரத்தான பாஸ்கர் சிவகங்கை மாவட்ட சேர்மனாக இருப்பதும் இவர் அதிமுகவை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.