காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜப்பெருமாள் கோவிலில் வைகாசி மாத உற்சவம் நடைபெற்றது!
1050 views
Subscribe காஞ்சிபுரம் videosஉலக புகழ்பெற்றதும்,அத்தி அரதர் கோவில் என்றழைக்கப்படும் கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வரதராஜப்பெருமாள் கோவிலில் வைகாசி மாத பிரம்மோற்சவம் கடந்த 31 ஆம் தேதி கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது.ஜூன் 2-ஆம் தேதி கருட சேவையும் 6-ஆம் தேதி திருத்தேரோட்டமும் மிக கோலாகலமாக நடைபெற்றதுஇந்நிலையில் வைகாசி மாத பிரம்மோற்சவத்தின் ஒன்பதாம் நாள் உற்சவமான இன்று நடைபெற்ற பல்லாக்கு உற்சவத்தில் உபய நாச்சியாருடன் வீதி உலா சென்ற வரதராஜப்பெருமாள், விளக்குடி கோயில் தெரு,மூங்கில் மண்டபம், நான்கு ராஜ விதிகளில் திரு வீதி உலா வந்து மீண்டும் கோவிலை வந்தடைந்து பின் கோவிலில் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது .அதனைதொடர்ந்து அத்தி வரதர் வைக்கப்பட்டுள்ள நீராழி மண்டபம் உள்ள அனந்தசரஸ் புஷ்கரணி தெப்பக்குளத்தில் வரதராஜப்பெருமாளுக்கு தீர்த்தவாரி உற்சவம் போலீசார் மற்றும் தீயணைப்புப் படை வீரர்களின் பாதுகாப்புடன் வெகு விமரிசையாக நடைபெற்றது.இதனைக் காண உள்ளூர் பகதர்களின்றி காஞ்சிபுரம் சுற்று வட்டார பக்தர்களும் அனல் கொதித்த கோவில் குளத்தின் படிக்கட்டுகளில் நீண்ட நேரங்களாக காத்திருந்து தீர்த்தவாரி உற்சவத்தை கண்டு ரசித்து,அதன் மின் அனைவரும் பக்தி பரவசத்துடன் குளத்தில் புனித நீராடினர்.