காஞ்சிபுரம்:பேனர் அனுமதி பிரச்சினை!
1019 views
Subscribe காஞ்சிபுரம் videosஉலகளவில் பட்டுக்கும்,கோவிலுக்கும் பெயர் போன மாநகரமாக காஞ்சிபுரம் விளங்கி வருகிறது.மேலும் சுற்றுலாத்தலமாகவும் விளங்குகின்ற காஞ்சிபுரத்திற்கு நாள்தோறும் பல்வேறு வெளி நாடுகள்,வெளி மாநில, மாவட்ட சுற்றுலாப் பயணிகள், பொது மக்கள்,பக்தர்கள் காஞ்சிபுரத்திற்கு வருகைப்புரிந்து உலக பிரசித்திப்பெற்ற பல்வேறு கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் மேற்கொண்டும்,பட்டுச் சேலைகளையும் வாங்கிச் செல்கின்றனர்.இந்நிலையில் காஞ்சிபுரம் மாநகரப் பகுதியான ரங்கசாமி குளம், இரட்டை மண்டபம், பூக்கடை சத்திரம், செங்கொழுநீரோடு வீதி, ஆகிய பகுதிகளில் வீடு கடை போன்ற அடுக்குமாடி கட்டிடங்களுக்கு மேல் பகுதிகளில் விளம்பர நிறுவனங்கள் ராட்சத பேனர்களை அமைத்து வருகின்றனர்.இது போன்ற ராட்சச பேனர்களை வைப்பதற்கு அந்தப் பகுதிக்கு உட்பட்ட காவல் நிலையத்தில் தடையில்லா சான்று மற்றும் மாநகராட்சியிடம் அனுமதி பெற வேண்டும்,அதன் பின்பே விளம்பர பேனர்களை விளம்பர நிறுவனங்கள் அமைக்க வேண்டும் என பல்வேறு கட்டுப்பாட்டுகளும், விதிகளும் முறையாக பின்பற்றிட வேண்டும்.இந்நிலையில் விளம்பர நிறுவனங்களுக்கு விளம்பரம் பேனர் அமைப்பதற்கு குறிப்பிட்ட கால அவகாசத்திற்கு தடையில்லா சான்று மாநகராட்சி சார்பில் அனுமதி அளிக்கப்பட்டு வருகின்ற நிலையில், காஞ்சிபுரம் மாநகரின் பல பகுதிகளில் தடையில்லா சான்று உரிமம் புதுப்பிக்காமலேயே தற்போது வரை ராட்சச அளவு கொண்ட விளம்பரம் பேனர்களை விளம்பர நிறுவனங்களால் அமைக்கப்பட்டு வருகிறது சமூக ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேலும் பல இடங்களில் பேனர்கள் கிழிந்து தொங்கிக்கொண்டு இருப்பதினால் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்னர் அவற்றை முறையாக அகற்றிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.மேலும் இவ்வாறு உரிமங்களை புதுப்பிக்காமலேயே ராட்சச அளவு கொண்ட விளம்பரம் பேனர்களை அமைத்து வரும் விளம்பர நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கையை மாநகராட்சி நிர்வாகம் எடுத்திட வேண்டும் என்ற கோரிக்கயையும் வெகுவாக எழுந்துள்ளது.மேலும் இது குறித்து காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையர் கண்ணன் அவர்களை தொடர்பு கொண்டு கேட்டப்போது, இது குறித்து உரிய ஆய்வு மேற்கொண்டு உரிமம் புதுபிக்காமல் இருக்கும் விளம்பர நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும்,உரிமம் புதுபிக்காமல் வைத்துள்ள விளம்பர பேனர்களும் அகற்றப்படும் என தெரிவித்தார்.