காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஆட்சியர் ஆக பொறுப்பேற்றார் கலைச்செல்வி மோகன்!
1068 views
Subscribe காஞ்சிபுரம் videosகாஞ்சிபுரம் மாவட்டத்தின் ஆட்சியராக இருந்த டாக்டர் மா.ஆர்த்தி கடந்த 16ஆம் தேதி, அனைவருக்கும் கல்வித் திட்டம் இயக்குனராக மாற்றம் செய்யப்பட்டு, புதிய மாவட்ட ஆட்சியராக தமிழக நில அளவைத் துறை கூடுதல் இயக்குனராக இருந்த கலைச்செல்வி மோகன் நியமிக்கப்பட்டார்.இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்ட கலைச்செல்வி மோகன் இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அரசு கோப்புகளில் கையெழுத்திட்டு மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன்,அனைத்து தரப்பு மக்களுக்கும் அரசின் நலத்திட்டங்களை சென்றடைய பாடுபடுவேன் என தெரிவித்தார்.மேலும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக கலைச்செல்வி மோகன் பதிவியேற்றப் போது காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் சிவ ருத்ரய்யா,திட்ட இயக்குனர் செல்வகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.மேலும் புதிய மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற கலைச்செல்வி மோகனை மரியாதை நிமித்தமாக பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்