காஞ்சி வேத பாடசாலையில் கிரிக்கெட் விளையாடிய இந்திய கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் ஐயர்!
காஞ்சி வேத பாடசாலையில் கிரிக்கெட் விளையாடிய இந்திய கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் ஐயர்!
காஞ்சிபுரம் அடுத்துள்ள ஓரிக்கை பாலாறு கரையோரம், காஞ்சி காமகோடி பீட 68 ஆவது சந்திரசேகர சரசுவதி சுவாமிகள் மணிமண்டபம் அமைந்துள்ளது. காஞ்சிபுரம் சங்கர மடத்திற்கு சொந்தமான இந்த மணிமண்டபத்தில், வேத பாடசாலையும் அமைந்துள்ளது. வேதத்தை பாடமாக எடுத்து படிக்கும் மாணவ மாணவர்கள் இங்கு வேதம் கற்று வருகின்றனர். இந்த நிலையில் மணிமண்டபத்தில் தரிசனம் செய்ய வந்த, இந்திய கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் ஐயர், வேத பாடசாலைக்கு வருகை புரிந்து, மாணவர்களுடன் கலந்துரையாடினார்.இதனைத் தொடர்ந்து வேத பாடசாலைமாணவர்களுடன் கிரிக்கெட் விளையாடிய வெங்கடேஷ் ஐயர், அம்மாணவர்களின் வேண்டுகோளுக்கிணங்க அவர்களுடன் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தார்.அப்போது வேத பாடசாலை மாணவர்கள் போட்ட பந்தினை சிக்ஸருக்கு அடித்து வெங்கடேஷ் ஐயர் அசத்தினார்.தற்போது இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.Updated: 7 Jun 2023, 12:16 pm