சிங்கபெருமாள் கோவில் அருகே நரசிம்ம பெருநாள் கோவிலில் கருட சேவை விழா!
1029 views
Subscribe காஞ்சிபுரம் videosசெங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோவில் - அனுமந்தபுரம் சாலையில், 100ஆண்டுகள் பழமையான பாடலாத்திரி நரசிங்கப்பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில், நேற்று முன்தினம், வைகாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கப்பட்டது புண்யகோடி விமானத்தில் உற்சவர் பிரகலாதவரதர் ஸ்ரீ தேவி, பூதேவி தாயாருடன், 4 மாடவீதிகளில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரண்டாம் நாளான நேற்று காலை, சூரிய பிரபை வாகனத்திலும், இரவு ஹம்ஸ வாகனத்திலும் வீதியுலா வந்து அருளினார். மூன்றாம் நாளான இன்று, கருடசேவை உற்சவம் வெகு விமர்சையாக நடந்தது. கருடசேவை வாகனங்களில் பெருமாள் எழுந்தருளி வீதியுலா வானூர்தி சென்று, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.மேலும் வரும் 30ம் தேதி, முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற உள்ளது..