பரந்தூர் புதிய விமான நிலையத்திற்கு எதிராக ஏகனாபுரம் மனு!
1017 views
Subscribe காஞ்சிபுரம் videosகாஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் சென்னையின் புதிய இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைய உள்ளதாக மத்திய மாநில அரசுகள் அறிவித்துள்ளது.இந்த புதிய விமான நிலையம் அமைப்பதற்கு பரந்தூரை சுற்றியுள்ள ஏகனாபுரம், நெல்வாய், மேல்லேரி, மகாதேவிமங்கலம் உள்ளிட்ட 13 கிராமங்களில் இருந்து சுமார் 4000 ஏக்கர் பரப்பளவில் விளைநிலங்கள் குடியிருப்புகள் கையகப்படுத்தப்பட உள்ளது.இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு பரந்தூர் பசுமை விமான திட்டத்தை மத்திய மாநில அரசுகள் கைவிட கோரி 280 நாட்களுக்கும் மேலாக ஏகனாபுரம் கிராம மக்கள் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்று வரும் பசிலி வருவாய் தீர்வாயம் முகாமில் நிலை எடுப்பு துணை ஆட்சியர் ஜோதி சங்கரிடம் ஏகனாபுரம் கிராமத்தைச் சேர்ந்த 10 க்கும் மேற்பட்டோர் பரந்தூர் விமான நிலைய திட்டத்தை மத்திய மாநில அரசுகள் கைவிட கோரி மனு அளித்துள்ளனர்.இது குறித்து ஏகனாபுரத்தைச் சேர்ந்த சுப்பிரமணி பேட்டியில் கூறுகையில்.விமான நிலையத்திற்கு எதிராக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் போராட்டம் 300 வது நாள் எட்டும் போது அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நூதனமான போராட்டமாக அமையும் என கூறியுள்ளார்,விமான நிலையம் அமைப்பதற்கான பணிகளை மத்திய மாநில அரசுகள் தீவிரப்படுத்தும் பட்சத்தில் தங்களது போராட்டமும் படிப்படியாக தீவிரமடையும், நிலங்களை கள ஆய்வு செய்வதற்கு கூட அதிகாரிகளை அனுமதிக்க மாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.