குடிநீர் வழங்கவில்லை என செங்கல்பட்டு நகராட்சி முன்பு கவுன்சிலர் தர்ணா
1030 views
Subscribe காஞ்சிபுரம் videosசெங்கல்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட தட்டார்மலை தெரு, படிக்கட்டுத்தெரு, நாசர் தெரு உள்ளிட்ட பல்வேறு தெருக்களை சேர்ந்த 2ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு ஆண்டு தோறும் மழைக்காலங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அதை சீர்செய்து குடிநீர் வழங்கப்பட்டு ஓரளவு சீர் செய்யப்படும்.ஆனால் தற்போது கோடைகாலம் துவங்கியதிலில் இருந்தே இந்த வார்டில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அது குறித்து தொடர்ந்து 2மாதமாக நகராட்சி ஆணையரிடம் புகார் அளித்து வருகிறேன். அன்றிலிருந்து இன்று வரை மோட்டார் பழுதாகிவிட்டது, வயர் அறுந்துவிட்டது.ஸ்ட்டாட்டர் பழுதாகி விட்டது என ஏதாவது ஒரு காரணத்தை கொல்லி காலம் தாழ்த்தி வருகிறார். கடந்த இரண்டு தினங்களாக கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. முற்றிலும் தண்ணீர் விநியோகம் இல்லை அதுகுறித்து ஆணையரிடம் முறையிடுவதற்காக அப்பகுதி வார்டு உறுப்பினர் என்ற முறையில் அவரை இன்று காலை சந்தித்து பேசுவதற்காக சென்று அவரிடம் பேசினால் என் பேச்சை காதில் போட்டுக்கொள்ளாமல் அலட்சியமாக எழுந்து செல்கிறார்.அதனால் எங்களுக்கு குடிநீர் வழங்க வேண்டும் அதுவரை இந்த இடத்தைவிட்டு நகர மாட்டேன் என நகராட்சி அலுவலம் முன்பு அமர்ந்து 9வது வார்டு உறுப்பினர் செங்கை இரா. தமிழரசன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அதனை தொடர்ந்து உடனடியாக குடிநீர் வழங்கப்பட்டது. இரண்டு மாதமாக பழுதடைந்திருந்த மோட்டார் தற்போது எப்படி சீரானது.என அப்பகுதியிலிருந்து மேலும் 20க்கும் மேற்பட்டோர் தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர்.