ஓட்டை உடைச்சலாக உள்ள குப்பை வாகனங்களால் அவதி-பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பணி செய்யும் அவலம்
1034 views
Subscribe காஞ்சிபுரம் videosகாஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளது. இந்த வார்டுகளில் இருந்து தினமும் வாகனங்களில் குப்பைகள் டன் கணக்கில் சேகரிக்கப்பட்டு மல்லியங்காரணை குப்பை கிடங்கிற்கு அனுப்பப்படுகிறது.குப்பை சேகரிப்பதற்காக, இரண்டு மினி லோடு வாகனமும், இரண்டு டாடா ஏசி மினி வாகனம் மற்றும் ஐந்து பேட்டரியில் இயங்கும் மின்சார ஆட்டோ உள்ளிட்டவை பேரூராட்சி சார்பில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.இதில்,ஒரு மினி லோடு வாகனம் 25 ஆண்டுகளுக்கு முன்னரும், மற்றொரு மினி லோடு வாகனம் 15 ஆண்டிற்கு முன்பும் வாங்கியுள்ளாதால், அந்த வாகனம் மிகவும் சேதமடைந்தது அங்கங்கே கம்பிகள் பெயர்ந்து ஓட்டை ஒடச்சலாக உள்ளது.அதனால், குப்பை சேகரிக்கும் தூய்மை பணியாளர்கள் மற்றும் வாகன ஓட்டுனர்களுக்கு அடிபடுவது மட்டுமல்லாமல் சேகரிக்கும் குப்பைகளும் வாகனத்தில் இருந்து கீழே விழுந்து வருகிறது.அதேபோல் பேட்டரியால் இயங்கும் இரண்டு ஆட்டோவும் பழுது அடைந்துள்ள காரணத்தால் பேரூராட்சி திடக்கழிவு மேலாண்மை அலுவலகத்தில் நிறுத்தப்பட்டு வீணாகி வருகிறது. மேலும், குப்பை சேகரிக்கும் தூய்மை பணியாளர்கள் எந்த வித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் குப்பை சேகரிந்து வருவதால் அவர்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயமும் உள்ளது.எனவே பேரூராட்சி பகுதிகளில் குப்பை சேகரிக்க புதிய வாகனங்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேரூராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.