சித்ரகுப்தர் திருக்கோவிலில் சித்ரா பெளர்ணமி திருக்கல்யாண விழா!
1055 views
Subscribe காஞ்சிபுரம் videosகோவில் நகரமான காஞ்சிபுரத்தில் உலக பிரசித்திப்பெற்ற பல்வேறு கோவில்கள் அமைந்துள்ளது.குறிப்பாக புண்ணிய நகரம்,முக்தி தரும் நகரம், நகரேஷூ காஞ்சி, என பல்வேறு பெயர் பெற்று விளங்கின்ற காஞ்சிபுரத்தில், பேருந்து நிலையம் அருகே உள்ள நெல்லுக்கார தெருவில்,உலகில் உள்ள ஜீவராசிகளின் பாவ புண்ணிய கணக்குகளை எழுதுபவராக கருதப்படும் சித்ரகுப்தர் சுவாமிக்கு, தென்னிந்தியாவிலேயே தனி சன்னதியாக கோவில் கொண்டுள்ள சித்ரகுப்தர் திருக்கோவில் அமைந்துள்ளது.இத்திருக்கோவிலில் ஆண்டு தோறும் சித்ரா பௌர்ணமி திருக்கல்யாண பெரு விழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.அந்தவகையில் இந்தாண்டு சித்ராபௌர்ணமி திருக்கல்யாண பெரு விழா வெகு விமரிசையாக நடைபெற்றதை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கும் சித்ரகுப்தர்,கர்ணகி அம்பாளை இன்று காலை முதலே பொது மக்களும் பக்தர்களும் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். குறிப்பாக உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநில,வெளியூரை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்,பொதுமக்கள் நீண்ட வரிசையில் பலமணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.மேலும் இதனையொட்டி கோவில் அருகாமையில் காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக பொருளாளர் வள்ளிநாயகம், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.யு.எஸ்.சோமசுந்தரம் ஆகியோர் ஏற்பாட்டில் மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம், அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் ஆகியோர் பக்தர்களுக்கும்,பொது மக்களுக்கும் அன்னதானங்களையும் வழங்கினர்.