செம்பரம்பாக்கம் ஏரியை திடீர் ஆய்வு செய்த கலெக்டர்
1183 views
Subscribe காஞ்சிபுரம் videosசெம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் திடீர் ஆய்வுசெம்பரம்பாக்கம் ஏரியின் விவரங்கள் குறித்து அதிகமாக கேட்டறிந்தார்உள்வாங்கி கோபுரத்தில் ஆபத்தான முறையில் திறந்து கிடந்த பள்ளத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த கலெக்டர்கடந்த மூன்று தினங்களாகதொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் ஏரியின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இன்று காலை நேர நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்ட உயரம் 19.70 அடியாகவும், மொத்த கொள்ளளவு 2530 மில்லியன் கன அடியாகவும், நீர் வரத்து 1424 கன அடியாக உள்ளது. தொடர்ந்து கன மழை நீடித்து வருவதால் ஏரிக்கு நீர் வரத்து மேலும் அதிகரித்த வண்ணம் உள்ளது. தற்போது செம்பரம்பாக்கம் ஏரி நீர் மட்டம் 20 அடியை நெருங்குவதால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்துஏரிக்கு வரும் நீரின் அளவையும், நீர்மட்ட உயரத்தையும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் தொடர்ந்து செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் இன்று அதிகாரிகளுடன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். செம்பரம்பாக்கம் ஏரியின் ஐந்து கண் மதகு, 19 கண் மதகு ஆகியவற்றை ஆய்வு செய்து உபரி நீர் செல்லும் வழித்தடங்கள் குறித்தும் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து சுத்திகரிப்பு நிலையத்திற்கு நாள் ஒன்றுக்கு எவ்வளவு தண்ணீர் குடிநீராக மாற்றப்படுகிறது. கடைசியாக செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டது குறித்த பல்வேறு விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் செம்பரம்பாக்கம் ஏரிலிருந்து உபரி நீர் செல்லும் வழித்தடங்களை செம்பரம்பாக்கம் ஏரி உதவி செயற்பொறியாளர் கோவிந்தராஜன் வரைபடங்களை காண்பித்தார். அதனை நம்பாமல் கலெக்டர் தனது செல்போனில் கூகுள் மேப்பில் பார்த்து தெரிந்து கொண்டார். மேலும் செம்பரம்பாக்கம் ஏரியில் உள்ள உள்வாங்கி கோபுரத்தில் ஆய்வு செய்தபோது அங்கு பல இடங்களில் ஆபத்தான முறையில் பள்ளங்கள் திறந்து கிடந்தது. இந்த வழியாக வருபவர்கள் யாராவது விழுந்து உயிரிழப்பு ஏற்பட்டால் என்ன செய்வது என அதிர்ச்சடைந்து அதிகாரிடம் உடனடியாக அதனை மூடும்படி கடிந்து கொண்டார். தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு கலைச்செல்வி மோகன் புதிய கலெக்டராக புதிதாக பொறுப்பேற்றதையடுத்து செம்பரம்பாக்கம் ஏரியின் முழு விவரங்கள் குறித்து கேட்டறிந்தது குறிப்பிடத்தக்கது.