பாம்பை தோளில் போட்டு கொண்டு மதுபாட்டில் வாங்க வந்த மதுப்பிரியர்!
1050 views
Subscribe காஞ்சிபுரம் videosடாஸ்மாக் கடைக்கு மதுவாங்க வந்தவரை பார்த்து பொதுமக்கள், கடைக்காரர்கள் அதிர்ச்சி அடைந்தனர். காரணம், அவர் தன் தோளில் பாம்பு ஒன்றை வைத்து கொண்டு மது கேட்டதுதான் இந்த சம்பவத்துக்கு காரணம். செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே டாஸ்மாக் கடை உள்ளது. அந்த கடைக்கு நேற்று மாலை ஒருவர் தோளில் துண்டு போட்டுக்கொண்டு வருவதுபோல சுமார் 7 அடி உயரம் கொண்ட சாரை பாம்பு ஒன்றை தோளில் போட்டுக்கொண்டு நண்பர் ஒருவருடன் மது வாங்க இருசக்கர வாகனத்தில் வந்தார். அப்போது, அங்கு மது வாங்க வந்த சக மதுபிரியர்கள் அலறியடித்தபடி அவருக்கு வழிவிட்டு ஓடினர்.பின்னர், அந்த பாம்பை கையில் வைத்துக்கொண்டு வேடிக்கை காட்டியபடி அவரது செய்கை இருந்ததால் சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் இதனை அதிசயமாக பார்த்தனர். பின்னர் அந்த பாம்பை அவர் அணிந்திருந்த லுங்கியில் போட்டு மடித்துக் கட்டிக்கொண்டு இரு சக்கர வாகனத்தில் ஏறி சென்றார். பின்னர் அவரை பின் தொடர்ந்து சென்றபோது அந்த பாம்பை புலிப்பாக்கம் அருகே கொள்வாய் ஏரி அருகேயுள்ள முட்புதரில் விட்டு விட்டார். இது குறித்து அவரிடம் கேட்டபோது, அவர் செங்கல்பட்டு அருகேயுள்ள பரனூரை சேர்ந்த சங்கர் என்றும் அவர் வரும் வழியில் பாம்பு குறுக்கே ஓடியதால் அவை வாகனங்களில் சிக்கி உயிரிழக்ககூடாது என்ற எண்ணத்தில் பிடித்துக்கொண்டு வந்து பாம்பின் உயிரை காப்பாற்றினேன் என்றார்.