ஸ்ரீபெரும்புதூரில் மூன்று கண்டெய்னர் லாரியில் பக்கவாட்டில் கவிழ்ந்து விபத்து!
1082 views
Subscribe காஞ்சிபுரம் videosகாஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார்சத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த சூறைக்காற்றுடன் நேற்று சுமார் அரை மணி நேரம் சாரல் மழை பெய்தது. அப்போது வீசிய பலத்தின் காற்றால் தேசிய நெடுஞ்சாலையின் ஓரம் சதுப்பு நிலத்தில் நிறுத்தப்பட்டிருந்த மூன்று கண்டெய்னர் லாரிகள் அடுத்தடுத்து பக்கவாட்டில் கலந்து விபத்துக்குள்ளானது. நிறுத்தப்பட்டிருந்த லாரியில் ஓட்டுனர் இல்லாததாலும், லாரியில் பொருட்கள் ஏதுமின்றி காலியாகவும் உயர்ந்த நிலையில் இருந்த காரணத்தினாலும் அடுத்தடுத்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர். மேலும் சாலையோரம் போக்குவரத்துக்கு இடையூறு இன்றி கவிழ்ந்ததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.