கலப்பு திருமணத்தால் கொலை மிரட்டல்-பாதுகாப்பு கோரி எஸ்பியிடம் புகார் மனு!
1076 views
Subscribe தமிழ்நாடு videosநாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த குருக்கத்தி பள்ளி வாசல் தெருவைச் சேர்ந்த 23 வயதான இளம்பரிதி ஆட்டோ ஓட்டி வருகிறார். திட்டச்சேரி பா. கொந்தை வ.உ.சி நகர் பகுதியைச் சேர்ந்த சௌமியா (19) கீழ்வேளூரிலுள்ள அரசாணி குளம் அருகே குடும்பத்துடன் இடம் பெயர்ந்து வாடகை வீட்டில் வசிங வருகின்றனர். இந்த நிலையில் தினமும் கல்லூரி செல்லும் போது சௌமியாவிற்கும் ஆட்டோ ஓட்டுநரான இளம்பரிதிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இருவரும் நெருங்கி பேசி பழக அது காதல் மலர்ந்துள்ளது. இரண்டு ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்த நிலையில், காதல் விவகாரம் வீட்டில் தெரிய பெரும் பூகம்பமே வெடித்தது. மாற்று சமூகம் என்பதால் பெண் வீட்டிலிருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பியதோடு, பெண் வீட்டார் வேறு திருமணம் செய்து வைக்க வரன் பார்த்துள்ளனர். இருந்த போதிலும் இளம்பருதி மீது சௌமியா கொண்ட அதீதக் காதலால் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். வீட்டின் எதிர்ப்பை மீறி நாகை அடுத்த நாகூரில் உள்ள ஸ்ரீ கங்கை முத்துமாரியம்மன் கோயிலில் இருவரும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர் இருப்பினும் வீட்டின் எதிர்ப்பை மீறி கலப்பு திருமணம் செய்து கொண்டதால் தங்களுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், ஆணவ கொலை செய்து விடுவார்கள் என்ற அச்சத்தில் மாலையும் கழுத்துமாக நாகை எஸ் பி அலுவலகத்திற்கு புதுமண தம்பதியினர் வந்தனர். எங்கள் உயிருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமென நாகை எஸ்பி ஜவஹரிடம் புகார் மனு அளித்தனர்.